fbpx

ஐபிஎல் அணியின் பெயரை டைட்டிலாக வைத்த வெங்கட் பிரபு..!! ’தளபதி 68’ படத்தின் மாஸ் அப்டேட்..!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார்.

லியோ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்துக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதன்படி, இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க இருப்பதாகவும் வீடியோ வாயிலாக அறிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அப்படத்தின் கதை என்ன..? ஹீரோயினி யார்..? என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் பரவிய வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறார்கள் என்பது குறித்த ஹாட் அப்டேட் தான் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன்படி, தளபதி 68 படத்திற்கு சிஎஸ்கே என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

தமிழ்நாட்டில் சிஎஸ்கே என்று சொன்னால் முதலில் ஞாபகத்துக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அப்படி இருக்கையில், வெங்கட் பிரபுவின் சிஎஸ்கே-விற்கு முழு பெயர் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கின்றனர். வெங்கட் பிரபுவை போல் நடிகர் விஜய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

பாயசத்தால் கலவர வீடான கல்யாண வீடு….. !சீர்காழி அருகே பரபரப்பு….!

Mon Jun 5 , 2023
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் இருக்கின்ற திருமண மண்டபம் ஒன்றில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது இதில் மண்டபத்தின் வாசலில் மணமகன் வீட்டார், மணமகன் வீட்டார் உள்ளிட்ட இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீர்காழி நகர காவல் துறையினர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து விசாரணை நடத்தியதில் நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தார்கள் உணவு […]

You May Like