தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவின் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார். அங்கு முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். பின்னர், மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் ஹிட்டாகவில்லை.
இதனால் மகேஷ் பாபு படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டார். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பின்னர் புதிய படங்களில் எதுவும் நடிக்காமல் வந்த வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டார். இவ்வாறாக அவர் புதிய படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவரது உடல்நிலைதான் என்று கூறப்படுகிறது.
அதாவது ராதே ஷியாம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்தபோது பூஜா ஹெக்டே கால் வலியால் அவதிப்பட்டுள்ளார். தற்போது இந்த வலி அதிகமானதால், பூஜா ஹெக்டேவுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எவ்வாறாயினும் இவர் விரைவில் குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.