fbpx

என்னது..!! 2 பிக்பாஸ் வீடுகளா..? அப்படினா சீசன் 7இல் தரமான சம்பவம் இருக்கு..!! வெளியான சூப்பர் அப்டேட்..!!

விஜய் டிவியை டிஆர்பி-யில் தூக்கி நிறுத்த உதவியது ரியாலிட்டி ஷோக்கள் தான். அந்த வகையில் கடந்த 7 மாதங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதனால் விஜய் டிவியின் டிஆர்பி ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால், தற்போது டிஆர்பி செம்ம அடி வாங்கி உள்ளது. இந்த டிஆர்பி-யை எகிற வைக்க தான் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இதுவரை தமிழில் 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த 6 சீசன்களுமே டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டுள்ளன. அந்த வரிசையில் 7-வது சீசனும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறது பிக்பாஸ் குழு.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், தற்போது அந்நிகழ்ச்சிக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் போட்டியாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வர, மறுபுறம் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். பிக்பாஸ் 7-வது சீசனில் சில ஆச்சர்யங்களும் அரங்கேற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் முக்கியமான தகவல் என்னவென்றால், இந்த சீசனில் 2 பிக்பாஸ் வீடுகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு வீட்டில் அடைக்க உள்ளார்களாம். சில வாரங்கள் கழித்து இரண்டு வீட்டில் உள்ள போட்டியாளர்களும் ஒரே வீட்டில் போட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுவரை எந்த மொழியிலும் இதுபோன்று நடந்ததில்லை. தமிழ் பிக்பாஸ் குழுவின் இந்த முயற்சி சக்சஸ் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Chella

Next Post

கோவிலுக்கு சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டிய நபர் கைது

Mon Aug 7 , 2023
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், கோவிலுக்கு செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் சென்றது. இதனையடுத்து திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் தப்பியோட முயன்றார், இதனை கண்ட போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீசார் நடத்திய […]

You May Like