fbpx

’புருஷனை ஏன் கூட்டிட்டு வர்றீங்க, அவர்கள் தொல்லை’..!! நடிகர் ராதாரவி சர்ச்சை பேச்சு..!!

’லைசென்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாடகி ராஜலட்சுமி ’லைசென்ஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதா ரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர் பேசுகையில், ”எங்க அப்பா சொன்ன மாதிரி, சினிமா அடிக்கிற காற்றில் நம்மை அப்படியே தூக்கிச் செல்லும். அடுத்த காற்றில் கீழே விழுந்து விடும். அதனால் எதையும் தலையில் ராஜலட்சுமி ஏற்றிக் கொள்ளக் கூடாது. சினிமாவில் இப்போதெல்லாம் நல்ல வேஷங்களை உருவாக்க முடியாது. ஏனென்றால், ஒரு வில்லனை எடுத்துக் கொண்டால் ஹீரோவே வில்லனாகவும் நடித்து விடுகிறார். கவர்ச்சி நடிகை வேடத்தை ஹீரோயினே எடுத்துக் கொள்கிறார். அப்பா-அம்மா கேரக்டர் என்றால் ஹீரோவே இடைவேளைக்கு பிறகு அப்பா ஆகி விடுகிறார்.

’புருஷனை ஏன் கூட்டிட்டு வர்றீங்க, அவர்கள் தொல்லை’..!! நடிகர் ராதாரவி சர்ச்சை பேச்சு..!!

பாரதி என்ற கேரக்டரில் ராஜலட்சுமி நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை தமிழ் சினிமாவில் வராத கதை. எனது 49 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் இதுபோன்ற கதையை நான் பார்க்கவில்லை. சப்ஜெக்டிற்கு ஏற்ற கதாநாயகி. குத்து விளக்கு ஏற்றும்போது கூட ராஜலட்சுமி அவரது கணவரை அழைத்தார். அவரை கூட்டிட்டு வராதீங்க. எதுக்கு புருஷன கூட கூட்டிட்டு வறீங்க. தொல்லை. நீங்க ஏதோ பாதுகாப்புன்னு நினைக்கிறீங்க. அது பாதுகாப்பு அல்ல. உங்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு. யாருமே யாரையும் பாதுகாக்க முடியாது. சினிமா மட்டுமல்ல, ஆபிசிலும் சரி, அரசியலிலும் சரி. நாம் நம்மைக் காப்பாற்றிக் கொண்டால்தான் முடியும்” என்றார்.

Chella

Next Post

PM-Kisan..!! விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

Wed Dec 14 , 2022
நாடாளுமன்றத்தில் பி.எம். கிசான் (PM-Kisan) திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ”கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12-வது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில், பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது […]

You May Like