தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர், நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் செம்ம பிசியாகிவிட்டார் சமந்தா. மறுபுறம் நாகசைதன்யாவும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும், அடிக்கடி நடிகைகளுடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அண்மையில் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா உடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று அங்கு இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின.
இந்நிலையில், நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். சாகுந்தலம் படத்தின் புரம்மோஷன் பணிகள் தற்போது பிசியாக நடந்து வருகிறது. அதில் விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சமந்தா கூறுகையில், “எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என காட்டமாக பதிலளித்துள்ளார்.