fbpx

’போன ஜென்மத்தில் நான் சோழனாக பிறந்திருப்பேனோ’..? காரணத்தை சொன்ன இயக்குநர் பார்த்திபன்..!!

“தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்திரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பேனா என்று தெரியவில்லை” என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் ராஜராஜன் செய்த சாதனைகளை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே நிலைத்து நிற்கும்.

’போன ஜென்மத்தில் நான் சோழனாக பிறந்திருப்பேனோ’..? காரணத்தை சொன்ன இயக்குநர் பார்த்திபன்..!!

இந்தப் பெரிய கோயிலை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு ரசனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதே ரசனையோடு தான் இந்த ‘பொன்னியின் செல்வன்’ இருக்கும். இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ நாம் கொண்டாட வேண்டியது, பாராட்ட வேண்டியது இந்த தஞ்சை மண்ணில் தான். இது ஒரு பான் (PAN) இந்தியா படம். அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்றுள்ளார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இதுபோல் வாய்ப்பு அமைந்துள்ளது. போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பேனா என்று தெரியவில்லை. இதுபோன்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

’போன ஜென்மத்தில் நான் சோழனாக பிறந்திருப்பேனோ’..? காரணத்தை சொன்ன இயக்குநர் பார்த்திபன்..!!

மக்கள் அனைவரும் ‘இரவின் நிழலுக்கு’ ஆஸ்கர் விருது கிடைக்குமா என கேட்கிறார்கள். அதுவே எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் இருப்பதாகவும், இந்தியாவிலிருந்து சென்ற தமிழ் படமான ‘இரவின் நிழலுக்கு’ ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்ததாகவும் தெரிவித்தார். இதுபோல் படங்கள் தொடர்ந்து செய்வதற்கு பாராட்டுகளும் உந்துதல் தான் காரணம். ‘பொன்னியின் செல்வனுக்கு’ பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்தியாவில் ‘பாகுபலி’ போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ மூலம் தமிழுக்கும் அந்தப் பெயர் கிடைக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; சோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்... பொன்னியின் செல்வன் தாக்கம்..!!

Fri Sep 30 , 2022
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே “பொன்னியின் செல்வன் -1″திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்று மதுரையில் […]

You May Like