பாமக பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. உரிமையியல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..

anbumani 1

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..


இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது..

அதன்படி பாமக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை கோரியும் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த மனு இன்று நீதிபதி தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, ராமதாஸின் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..

RUPA

Next Post

தவெக ரெடியா இருக்கு.. மீண்டும் திமுகவை சீண்டிய காங்கிரஸ்..! ஸ்டாலின் சொன்ன கட் அண்ட் ரைட் பதில்..! பரபரக்கும் அரசியல் களம்..!

Wed Feb 25 , 2026
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]
stalin rahul vijay 1

You May Like