குமரி அனந்தனுக்கு அரசு வீடு..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையும், காங்கிரஸின் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தமிழக முதலமைச்சர்  வழங்கினார்.


காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

குமரி அனந்தன்

இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கினார். மேலும், இதற்கான ஆணையை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் குமரி அனந்தனிடம் வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Next Post

சென்னை பறக்கும் ரயிலில் மாணவர்கள் ஆபத்தான பயணம் ….

Thu Sep 29 , 2022
சென்னை பறக்கும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பறக்கும் ரயிலில் மாணவர்கள் ஜன்னலில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் 5 மாணவர்கள் ஜன்னலில் கால் வைத்து ரயிலின் மேற்பகுதியை பிடித்துக் கொண்டு ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டனர். விபரீதத்தை உணராமல் மாணவர்கள் தலைகீழாக தொங்கி அட்டகாசம் செய்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் […]
பறக்கும்

You May Like