லட்டுக்குள் கரப்பான் பூச்சி…! ஆந்திராவின் புகழ்பெற்ற கோயிலில் அதிர்ச்சி சம்பவம்…!

cockroach laddu 2

ஆந்திராவின் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 29 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சரஸ்சந்திரா என்ற பக்தர், லட்டுவில் இறந்த பூச்சி இருப்பதைக் காட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.


லட்டுவில் பூச்சியைக் கண்ட சரஸ்சந்திரா, கோயில் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பதில் அளிக்காமல் அவரது கையிலிருந்து லட்டுவை பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த மற்ற பக்தர்கள் பிரசாதத்தின் தரம் குறித்து கேள்வி எழுப்பினர். சரியான விளக்கம் அளிக்காத அதிகாரிகள் புகார் கூறிய நபரிடம் இருந்து வீடியோவை அழிக்க அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, சரஸ்சந்திரா கோயில் நிர்வாக அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிரசாதம் தயாரிக்கும்போது தேவஸ்தான ஊழியர்கள் கவனம் செலுத்தவில்லை. இது மிகவும் கவலைக்குரியது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராவ் பதிலளிக்கையில், “லட்டுகள் தயாரிப்பு ஊழியர்களின் முழுமையான மேற்பார்வையில் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன. கரப்பான் பூச்சி காணப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Read more: அடித்துக் கொல்லப்பட்டவர் தீவிரவாதியா? சிவகங்கை லாக் அப் டெத் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி..

Next Post

கொட்டி தீர்த்த கனமழை.. 24 மணி நேரத்தில் 3 பேர் பலி.. சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. Video..

Mon Jun 30 , 2025
Heavy rains in Himachal Pradesh claimed three lives in 24 hours, taking the total death toll to 20.
kullu anni landslide building collapse himachal pradesh rains 169285477316x9 1

You May Like