“Paris Kids Fashion Week” என்ற பெயரில் ஒரு சீன நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் ஃபேஷன் ஷோ நடத்தி வருகிறது. பல பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பெற்றோர்களை ஏமாற்றி பணம் வசூலித்தது. உண்மையில் பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத இந்த நிறுவனம், உலகின் முக்கியமான ஃபேஷன் மேடைகள், பிரபல பிராண்டுகள் மற்றும் புகழ்பெற்ற கலைக் கூடங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
ஒரு குழந்தையை ராம்ப் வாக்கில் அழைத்துச் செல்ல ரூ.6,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.71,000 வசூலித்தது. பெற்றோர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மொத்தமாக ரூ.44 லட்சம் (367,000 யுவான்) வரை பதிவு கட்டணமாக பெற்றனர். ஒரு ஆடைக்கு ₹1.20 லட்சம் (10,000 யுவான்) என்ற அளவுக்கு கட்டணம் வாங்கியதாகவும், அந்த ஆடைகளில் பல போலியானவை எனவும் ஊழியர் ஒருவர் விசாரணையில் தெரிவித்தார்.
2023ல் Gucci நிறுவனம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஷாங்காய் சந்தை ஒழுங்குமுறை அமைப்பு, இது முற்றிலும் போலி மற்றும் மோசடி என உறுதி செய்தது.
அதன் பின்னணியில், அந்த நிறுவனத்துக்கு ரூ.71 லட்சம் அபராதம் (600,000 யுவான்) விதிக்கப்பட்டது.
நிறுவன உரிமையாளர் ஹுவாங் கூறுகையில், இந்த ஆடைகள் ஆன்லைனில் வாங்கப்பட்ட போலி ஆடைகள் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், அவை வெறும் புகைப்படக் காட்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் விற்பனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். வர்த்தக முத்திரைகள் மற்றும் பிராண்டு பெயர்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன சட்டவிரோதம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்கள் இன்னும் செயல்பாட்டிலேயே உள்ளன. இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் இதுபோன்ற பக்கங்கள் காணப்பட்டாலும், மிகக் குறைந்த ஈடுபாடு மட்டுமே இருந்தது. கடைசியாக 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பதிவுகளுடன் இவை இன்றும் நீடிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் சீன நெட்டிசன்கள் பலர் மக்கள் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தும் கலாசாரம் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் “இப்போதெல்லாம் இப்படித்தான். கலை, விளையாட்டு பள்ளிகள் எல்லாம் போலியான போட்டிகள் நடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்கின்றன,” என தெரிவித்தார். மற்றொரு பயனர் “தங்கள் குழந்தைகள் பிரபலமாக மாற வேண்டும் எனக் கருதும் பெற்றோர்களின் மன நிலையை கையாளும் மோசடி இது!” என பதிவிட்டிருந்தார்.