வரி ஏய்ப்பு புகார்!… டெல்லியில் உள்ள மேன்கைன்ட் பார்மா நிறுவனங்களில் சோதனை!… வருமான வரித்துறை அதிரடி!

வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து டெல்லியில் உள்ள‘மேன்கைன்ட் பார்மா’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


மேன்கைண்டு பார்மா’ நிறுவனம், நாள்பட்ட சிகிச்சைக்கு தேவையான மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மாத இறுதியில் 4,326 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்தது. கடந்த 9ம் தேதியன்று அதன் பங்குகளை சந்தையில் பட்டியலிட்டது.பட்டியலிடப்பட்ட இரண்டாவது நாளிலேயே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, புதுடில்லி மற்றும் அதை சுற்றியுள்ள இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை நேற்று மேற்கொண்டனர்.

நிர்வாகிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், அதிகாரிகளின் சோதனைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், மேன்கைண்டு பார்மா நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டாவது நாளிலேயே, வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

இளம் பருவ காதலை நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது!... டெல்லி உயர்நீதிமன்றம்!

Sat May 13 , 2023
இளம் பருவ காதலை நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஜாமீன் நிராகரிக்கும்போதும் அல்லது ஜாமீன் வழங்கும்போதும் நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவண காந்தா சர்மா, இளமைப் பருவக் காதலை” நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது. போக்ஸோ வழக்குகளில் ஜாமீன் மறுப்பதா அல்லது வழங்குவதா என்பதைத் தீர்மானிக்கும் போது நீதிபதிகள் […]
delhi high court

You May Like