ஆ.ராசாவை கண்டித்து முழு அடைப்பு..!! தமிழக பேருந்து கண்ணாடி உடைப்பு..!! புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக இன்று காலை முதல் நகரின் அனைத்து டீக்கடை முதல் பெரிய கடைகள் வரை எதுவும் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் மற்றும் டெம்போக்கள் இயங்கவில்லை. ஒரு சில புதுச்சேரி அரசு மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. பெரிய மார்க்கெட்டான குபேர் அங்காடி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து அங்காடிகளும் மூடப்பட்டுள்ளது.

ஆ.ராசாவை கண்டித்து முழு அடைப்பு..!! தமிழக பேருந்து கண்ணாடி உடைப்பு..!! புதுச்சேரியில் பரபரப்பு

அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், நகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளாக நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

ஆ.ராசாவை கண்டித்து முழு அடைப்பு..!! தமிழக பேருந்து கண்ணாடி உடைப்பு..!! புதுச்சேரியில் பரபரப்பு

இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பகுதி அருகே பேருந்துகள் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!

Tue Sep 27 , 2022
அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில், தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், பகுதி நேர […]
school tn gove

You May Like