சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி..? இதுதான் என் வாழ்நாள் லட்சியம்..!! சும்மா விடமாட்டேன்..!! சசிகலா பரபரப்பு பேட்டி..!!

VK Sasikala 2026

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியை அகற்றி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் சூளுரைத்துள்ளார்.


தனது 39 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அனுபவத்தையும் சுட்டிக்காட்டிய சசிகலா, இன்றைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதாக குறிப்பிட்டார். குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை ஒரு முக்கிய மைல்கல்லாக கருதுவதாகத் தெரிவித்த அவர், திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்குவதே தனது முதல் இலக்கு என்றார்.

கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பழைய கசப்புகளை மறந்து, ஒருமித்த கருத்துடன் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிதறிக் கிடக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே ஜெயலலிதா காட்டிய பாதையில் அதிமுகவை மீண்டும் அரியணையில் அமர்த்த முடியும் என வலியுறுத்திய அவர், அதற்கான வியூகங்களை வகுப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

Read More : Breaking : மீண்டும் ஷாக் ..! 2 முறை உயர்வு..! ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்த தங்கம் விலை! வெள்ளி விலையும் ரூ. 20,000 அதிகரிப்பு..!

CHELLA

Next Post

Breaking : மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்..! சபாநாயகர் மீது பேப்பர் வீசியதால் நடவடிக்கை..!

Tue Feb 3 , 2026
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதால் இந்த 9 பேரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், கிரண் குமார் ரெட்டி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் அடங்குவர். இந்த எம்.பி.க்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சு. வெங்கடேசன் ( […]
lok sabha 2 1770112842 1 1

You May Like