பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக பிரிக்க ஒரு கும்பல் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த அமைப்பை சார்ந்தவர்கள் காலிஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போதே பஞ்சாப் பிரிவினையும் முன்வைக்கப்பட்டது. இந்தியாவில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட சிலர் இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக பிப்.23ஆம் தேதி வாரிஸ் பஞ்சாட்டி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து இந்த அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமையில் கத்தி, அரிவாள், கம்பு என பயங்கர ஆயுதங்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டதால் நிலைமை கட்டுக்குள் இருந்து மீறுவதை உணர்ந்த காவல்துறையினர் குறிப்பிட்ட நபரை விடுதலை செய்தனர்.
இந்நிலையில், நேற்று மார்ச் 18ஆம் தேதி அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் ஏற்படும் பதற்றத்தை தணிக்க அம்மாநிலம் முழுவதும் இணைய சேவை, வங்கி சேவைகள், மொபைல் ரீசார்ஜ் சேவைகள், எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கப்படும் என பஞ்சாப் உள்துறை அறிவித்தது. சீக்கிய மத போதகரான அம்ரீத்சிங் பால் துபாயில் இருந்து திரும்பிய பின்னர் சாலை விபத்தில் இறந்த நடிகரும், ஆர்வலருமான தீப் சித்துவால் நிறுவப்பட்ட ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அம்ரித்பால் சிங் கைது தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.