தொடர் விடுமுறை..!! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! போக்குவரத்துத்துறை அதிரடி..!!

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.


மேலும், ஏப்ரல் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21ஆம் தேதி 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை மற்றும் மதுரைக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. விடுமுறைக் காலங்களில் மக்கள் பேருந்து நிலையங்களில் வாகனங்களுக்கு அலைமோதுவதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

ஆசிரியரின் செல்போனில் கொட்டிக் கிடந்த மாணவிகளின் ஆபாச வீடியோக்கள்..!! சீறிய பெற்றோர்கள்..!!

Thu Apr 13 , 2023
அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் அப்பள்ளி மாணவிகளை ஆபாசமாக செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் […]
mobile video

You May Like