கோடைகாலத்தில் உங்கள் குடல், தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க குல்கந்து நம்பமுடியாத அளவிற்கு குளிர்ச்சி தன்மையை கொடுக்கிறது.
குல்கந்து என்றால் உட்கொள்ள கூடிய ரோஜா இதழ்களை பதம் ஆக்கி அதனை ஜாம் செய்து வைத்திருப்பது தான். இந்த குல்கந்து -ஐ பாலில் சேர்த்து குடிப்பது வெயில் காலத்தில் உங்கள் சருமங்களை பாதுகாக்க உதவுகிறது. கோடைகாலம் தொடங்கினாலே போதும் அதிகபடியான வெப்பநிலை காரணமாக நாம் நிறைய சுகாதார சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதிக வியர்வை, வேர்க்குரு, உஷ்னம், உடல் சோர்வு, சரும பிரச்சனை என பல உள்ளன. இருப்பினும், இந்த கோடைகாலத்தில் வெப்பத்தை எவ்வாறு வெல்வது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்களுக்கு குல்கந்து ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். குல்கந்து என்பது பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகுந்த ஆயுர்வேத மருந்து என்று கூறப்படுகிறது.
இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தினசரி குல்கந்து சாப்பிடுவதால் அவை வெப்பத்தை தணிக்க உதவும். எனவே ரோஜா இதழ்களால் செய்யப்பட்ட இந்த மணம் மற்றும் சுவையான ஜாமை நீங்கள் தினமும் சாப்பிட முயற்சிக்க வேண்டும். இதனை நீங்கள் எளிதில் தயாரிக்கலாம். எப்படி என்பதை கீழே காணலாம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பன்னீர் ரோஜாக்களின் இதழ்களை தனியாக பிரித்தெடுத்து அதனை நனவு கழுவி உலர வைக்க வேண்டும். பிறகு ஒரு பெரிய கற்கண்டு மற்றும் உலர வைத்த ரோஜா இதழ்கள் இரண்டையும் நன்கு இடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டுமானால் இதனுடன் சிறிது கசகசா மற்றும் வெள்ளரி விதைகளை சேர்த்து இடித்துக்கொள்ளலாம். இப்பொது ஒரு கண்ணாடி குடுவை எடுத்து, அதில் இடித்து வைக்கப்பட்ட ரோஜா பேஸ்டை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த ஜாடியை சுமார் ஒரு வாரத்திற்கு வெயிலில் வைக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்குள் உங்களது ரோஜா குல்கந்து தயாராகிவிடும். இதனை தினமும் நீங்கள் சாப்பிடும் போது சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடலாம்.
குல்கந்தை தினசரி எப்படி சாப்பிடலாம்? தினசரி குல்கந்துவை சாப்பிட பல வழிகள் உள்ளன. முதலில் ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து, அதனை குடிக்க வேண்டும். அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிட வேண்டும். அடுத்து, அமிலத்தன்மை மற்றும் இதுதொடர்பான பிற பிரச்சினைகள் உள்ளவர்கள் பாலில் குல்கந்துவை சேர்த்து உட்கொள்ளலாம். சிறிது குளிர்ந்த பால் எடுத்து, ஒரு டீஸ்பூன் குல்கண்ட் சேர்த்து பகிருங்கள்.