இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி மற்றும் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா மாதிரி பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 220.65 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் மேம்படுத்தப்பட்ட ஆய்வக கண்காணிப்பு மற்றும் அனைத்து கடுமையான சுவாச நோய் வழக்குகளின் சோதனையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேவையான மருந்துகள் கிடைப்பதை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, போதுமான நியமிக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.