மாணவனை அடித்த டியூசன் ஆசிரியருக்கு 6 மாதம் சிறை.. 1 லட்சம் அபராதம்..!! – நீதிமன்றம் அதிரடி

teacher 1

குஜராத் மாநிலம் வதோதரா நகரத்தில் தனியார் பயிற்சி மையம் ஒன்றில் பயின்ற 15 வயது மாணவன் மீது உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியதற்காக, அந்த மையத்தை இயக்கிய ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் கடும் தீர்ப்பு வழங்கியுள்ளது.


ஜஸ்பீர்சிங் சவுகான் என்ற ஆசிரியர், 10ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை தனிப்பட்ட வகுப்பாக கற்பித்து வந்தார். 2019 டிசம்பர் 23-ஆம் தேதி, மாணவர் வழக்கம்போல் வகுப்பிற்கு சென்றிருந்தார். ஆனால், வகுப்பின் இறுதியில் பயிற்சி மையத்தில் இருந்து தன் பெற்றோரைக் கூப்பிட்டு, தேர்வுப் படிவம் ஒன்றை கொண்டு வரச் சொன்னார். அங்கு வந்த பெற்றோர் யாரோ கடுமையாக அடிக்கின்ற சத்தத்தை கேட்டனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, ஆசிரியர் சவுகான் தனது மகனை முகத்திலும் காதுகளிலும் பலமுறை அறைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணை அணுகினர். போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் மாணவனின் காதுகள் மோசமாக கிழிந்து, இரத்தம் வெளியேறியதாகவும் உறுதி செய்யப்பட்டது. சவுகான் மீது போலீசார் ஜனவரி 2020 இல் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து நடந்த நீண்டகால சட்ட நடவடிக்கைகளின் முடிவில், வதோதரா ஜூனியர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (J.M.F.C) ஆசிரியருக்கு ஆறு மாதக் கடுங்கால சிறைத் தண்டனையையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து, குழந்தை உரிமைகளின் மீதான ஆணவத்தை தட்டிக்கேட்டது.

இந்த தீர்ப்பு, கல்வி நிலையங்களில் குழந்தைகள் மீதான உடல் தண்டனையை முற்றாக ஒழிக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியது தவிர, கட்டாயப்படுத்தும் முறைகள் முற்றிலும் தவறானவை எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Read more: மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..!! – நடந்தது என்ன..?

English Summary

Corporal punishment gets Gujarat private tutor 6 months jail, Rs 1 lakh fine

Next Post

வறுத்த பூண்டில் இவ்வளவு நன்மைகளா?. 24 மணி நேரத்தில் இளம் பெண்களின் உடலில் ஏற்படும் ஆச்சரியம்!.

Mon Jul 21 , 2025
சமையலறையின் ஒருங்கிணைந்த பகுதியாக பூண்டு உள்ளது, ஆனால் அதன் பங்கு சுவையை அதிகரிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், பூண்டின் நன்மைகள் மிகவும் ஆழமானவை, அது ஒரு மருத்துவ அதிசயமாக மாறியுள்ளது. குறிப்பாக நெய் அல்லது எண்ணெயில் வறுத்து உட்கொள்ளும்போது, அது வெறும் 24 மணி நேரத்திற்குள் உடலில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்குகிறது. வறுத்த பூண்டின் நன்மைகள் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? வறுத்த பூண்டில் […]
Roasted Garlic 11zon

You May Like