போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..! சினிமா பாணியில் நடந்த தாக்குதல்..! பெரம்பலூரில் பரபரப்பு..!

police rowdy attack

பெரம்பலூர், திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த போது மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்..


இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 2 போலீசார் படு காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் போலீஸ் வாகனத்தில் இருந்த ரவுடி வெள்ளைக்காளி என்ன ஆனார் என்பது குறித்த தெளிவான விவரம் இல்லை.. ரவுடி வெள்ளைகாளி மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

வெள்ளைக்காளியை கொல்ல முயற்சியா அல்லது அவரை தப்பிக்க வைக்க நடத்தப்பட்ட தாக்குதலா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Read More : நாளை 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..! வானிலை மையம் வார்னிங்..!

RUPA

Next Post

தவறுதலாகக் கூட இந்த விஷயங்களை கூகுளில் தேடாதீங்க.! உங்களுக்கு தான் பெரும் சிக்கல்..!

Sat Jan 24 , 2026
இன்றைய வாழ்க்கையில், இணையம், தேடுபொறிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை நமது அன்றாடத் தேவைகளாகிவிட்டன. ஆனால், ஒவ்வொரு ஆன்லைன் தேடலும் ஒரு டிஜிட்டல் பதிவை உருவாக்குகிறது என்பதை மிகச் சிலரே புரிந்துகொள்கிறார்கள். கூகுளில் குறிப்பாக சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோதமான ஒன்றை தேடும்போது, ​​முகமைகள் இந்தத் தகவலைக் கண்காணிக்க முடியும். இந்தியாவில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் யுஏபிஏ போன்ற சட்டங்கள் ஆன்லைன் செயல்பாடுகளைக் கூர்ந்து கண்காணிக்கின்றன. […]
google search 11zon

You May Like