பெரியார் பல்கலை. முன்னாள் பதிவாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1998-ம் ஆண்டு தெய்வக்கனி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியில் சேர்க்கப்பட்டார்.. அவர் 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த உத்தரவை எதிர்த்து அவர், 2013-ம் ஆண்டு சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2021-ம் ஆண்டு தெய்வக்கனியை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டது… ஆனால் அப்போதைய பதிவாளர் தங்கவேலு, தெய்வக்கனியை பணியில் மீண்டும் சேர்க்கவில்லை.. எனவே இந்த உத்தரவை பதிவாளர் நிறைவேற்றவில்லை என்று கூறி, நீதிமன்ற அவமதிப்பை வழக்கை 2022-ம் ஆண்டு தெய்வக்கனி தொடர்ந்தார்..


இந்த வழக்கை விசாரித்த சேலம் தொழிலாளர் நீதிமன்றம், அந்த உத்தரவை பின்பற்றததால், அப்போதைய பதிவாளர் தங்கவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.. 2021-ல் பதிவாளராக இருந்த தங்கவேலும் தற்போது பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார்..

RUPA

Next Post

இந்த லிங்கை மட்டும் கிளிக் செய்துவிடாதீர்கள்.. 3 நாட்களில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த 40 வங்கி வாடிக்கையாளர்கள்..

Mon Mar 6 , 2023
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. அந்த வகையில் மும்பையில் கடந்த 3 நாட்களில் 40 வங்கி வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, KYC மற்றும் PAN விவரங்களைப் புதுப்பிக்கும்படி ஒரு லிங்க் அனுப்பப்பட்டது. அந்த லிங்கை கிளிக் செய்ததால், அவர்களின் […]
cyber crime

You May Like