சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1998-ம் ஆண்டு தெய்வக்கனி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியில் சேர்க்கப்பட்டார்.. அவர் 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த உத்தரவை எதிர்த்து அவர், 2013-ம் ஆண்டு சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2021-ம் ஆண்டு தெய்வக்கனியை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டது… ஆனால் அப்போதைய பதிவாளர் தங்கவேலு, தெய்வக்கனியை பணியில் மீண்டும் சேர்க்கவில்லை.. எனவே இந்த உத்தரவை பதிவாளர் நிறைவேற்றவில்லை என்று கூறி, நீதிமன்ற அவமதிப்பை வழக்கை 2022-ம் ஆண்டு தெய்வக்கனி தொடர்ந்தார்..
இந்த வழக்கை விசாரித்த சேலம் தொழிலாளர் நீதிமன்றம், அந்த உத்தரவை பின்பற்றததால், அப்போதைய பதிவாளர் தங்கவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.. 2021-ல் பதிவாளராக இருந்த தங்கவேலும் தற்போது பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார்..