ஏர்டெல் நிறுவனத்தின் அசத்தல் திட்டங்கள்..!! இனி 5ஜி வேகத்தில் ஓடிடி தளங்களை பயன்படுத்தலாம்..!!

நாட்டில் ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது ஓடிடி சேவையுடன் கூடிய 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி வசதிகளை 5ஜி சேவையுடன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏர்டெல்லின் 499 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவை கிடைக்கிறது. அதோடு Xtreme app, Wynk Music subscription போன்றவைகளும் கிடைக்கும்.

Airtel 5G

இதில் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா என்ற அளவில் 4 ஜிபி டேட்டா வரை கிடைக்கும். அதன் பிறகு ஏர்டெலின் 839 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி, 3 மாதங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், Xtreme app, Wynk Music போன்ற வசதிகள் கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் சேவைகள் போன்றவைகளும் கிடைக்கும். இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்ற அளவில் 4 ஜிபி வரை கிடைக்கும். இதையடுத்து, 699 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வசதி, அமேசான் பிரைம், Xtreme app, Wynk Music போன்ற வசதிகள் கிடைக்கும். இதில் 3ஜிபி என்ற அளவில் 4ஜி டேட்டா வரை பயன்படுத்தலாம்.

ஏர்டெலின் 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 86 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 5ஜி, 100 எஸ்எம்எஸ் வசதி, 86 நாட்கள் வரை அமேசான் பிரைம், Xtreme app, Wynk Music, 2.5 ஜிபி முதல் 4ஜி டேட்டா வரை கிடைக்கும். மேலும், ஏர்டெல் 3,359 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சேவை கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வசதி, தினமும் 2.5 ஜிபி வரை 4ஜி டேட்டா வரை பயன்படுத்தலாம்.

CHELLA

Next Post

அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..!!

Wed Apr 26 , 2023
இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), சுதந்திர தின நாள், (15, ஆகஸ்ட்) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை கொரோனா […]
202111071630320830 Rain damage in Chennai 15 IAS officers appointed SECVPF

You May Like