கிரிக்கெட்டர் ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்.பி ப்ரியா சரோஜா இருவருக்கும் நவம்பர் 19ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி கட்சியின் பிரியா சரோஜை ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
பிரியா சரோஜ் வாரணாசியை சேர்ந்தவர். உத்தரபிரதேசம் மச்லீஸ்வர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு 25 வயதே ஆகும் நிலையில், இளம் எம்பி என்ற பெருமையை பெற்றிருக்கிறார். மேலும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை தற்போது எம்எல்ஏ ஆக உள்ளார்.
இருவரும் ஓராண்டுக்கு மேலாக பழகிவந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு குடும்பங்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து, அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளனர். இருவருக்கும் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்தம் நடைபெற்ற நிலையில், வாரணாசியில் நவம்பர் 19 ஆம் தேதி திருமணமும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனேன்றால் இதே நவம்பரில் ரிங்கு சிங்-க்கு கிரிக்கெட்டில் கமிட்மென்ட்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாம்.
Read more: ஒரு காலத்தில் நண்பராக இருந்த அமெரிக்கா, ஈரானின் பரம எதிரியாக மாறியது எப்படி..?