கூட்ட நெரிசல் வழக்கு!. ஆர்.சி.பி அதிகாரி உட்பட 4 பேர் கைது!. போலீசார் அதிரடி!.

bengalore crowd 4 arrest 11zon

பெங்களூரு வெற்றிக்கொண்டாட்ட நெரிசல் வழக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது கிரிக்கெட் சங்கமா ? அரசா ? , விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்த வழக்கில் பதிலளிக்க ஐ.பி.எல். நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .

இந்தநிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோஸ்லே உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நிகில் மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

Readmore: ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் வையுங்கள்!. நாடு முழுவதும் சுகாதாரத் துறை எச்சரிக்கை!

KOKILA

Next Post

அமெரிக்கா, சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா சாதனை!. உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக உருவெடுத்தது!

Fri Jun 6 , 2025
சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும், இவ்வளவு பெரிய சந்தையாக இருந்தபோதிலும், இந்திய குடும்பங்களில் சுமார் 6 சதவீதத்தினர் மட்டுமே உண்மையில் கார் வைத்திருக்கிறார்கள். நைஜீரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. நைஜீரியாவில், சுமார் 18 சதவீத குடும்பங்கள் சொந்த வாகனம் […]
car market 11zon

You May Like