மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சி.ஆர்.பி.எஃப் இல் காலியாக உள்ள 9,212 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ரிசர்வ் போலீசில் ஆண்களுக்கு 9105 இடங்களும் பெண்களுக்கு 107 காலியிடங்களும் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.
மத்திய அரசின் ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள டெக்னிக்கல் அண்ட் ட்ரேட்மேன் பிரிவுகளின் கீழ் 9212 காலியிடங்கள் உள்ளன. இவற்றில் டிரைவர் பணிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 மற்றும் உச்சபட்ச வயது வரம்பு 27 ஆகும்.கோப்லர் கார்பெண்டர்/ தையல்காரர்/பித்தளை பேண்ட்/பைப் பேண்ட்/ பக்லர்/ கார்ட்னர்/ பெயிண்டர்/சமையல்/தண்ணீர் கேரியர்/வாஷர்மேன்/பார்பர்/சஃபாய் கரம்சாரி/மேசன்/பிளம்பர்/எலக்ட்ரீஷியன் ஆகிய பணிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் உச்சபட்ச வயது வரம்பு 23 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் ஐந்து வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது . ஓ.பி.சி பிரிவு மற்றும் எக்ஸ் சர்வீஸ் மேன் ஆகியோருக்கு உச்சபட்ச வயதிலிருந்து மூன்று வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு கலவரம் மற்றும் 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரம் ஆகியவற்றில் உயிரிழந்தவரின் குழந்தைகளுக்கு உச்சபட்ச வயது வரம்பிலிருந்து ஐந்து வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு இணையான பாடத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் மூலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன மெக்கானிக் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் மோட்டார் வாகன மெக்கானிக் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். மேசன் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ இன்ஸ்டிட்யூட்டில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்ற ட்ரேட்ஸ்மேன் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக 21,700 ரூபாயிலிருந்து 69,100 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சி.ஆர்.பி.எஃப் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.04.2023 ஆகும். விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் டெஸ்ட் மற்றும் உடற்பகுதி பரிசோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கம்ப்யூட்டர் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் தீர்வுகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய crpf.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான விண்ணப்ப படிவத்தையும் அந்த இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.