பன்னாட்டு சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த பதிவில், புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானிய மேலாளரின் கீழ், இந்திய ஊழியர்களுக்கு எதிராக கலாச்சார அக்கறையின்மை, பாகுபாடு மற்றும் நச்சுத்தன்மை நிலவுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததாகக் கூறும் பெயரில்லா ரெடிட் பயனர், இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட (acquisition) செயல்முறைக்குப் பிறகே இந்த பிரச்சினைகள் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மேலாளர் (பாகிஸ்தானியர்) கையகப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு பின்னர் பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது. இவர், குறிப்பாக இந்திய குழு உறுப்பினர்களை நோக்கி, பணியிடத்தில் நச்சுத்தன்மை(பாதகமான சூழல்) சூழலை உருவாக்கி வருவதாக அந்த ஊழியர் குற்றம் சாட்டியுள்ளார்.
“முதலில், அவர் நன்றாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக, அது மோசமாகிவிட்டது,” என்று ஊழியர் எழுதினார். “பல தொலைபேசி அழைப்புகளில் அவர் பயன்படுத்திய சில சொற்களும், இந்தியர்களை அவர் இழிவாகப் பார்க்கும் விதமும் என்னை சந்தேகப்பட வைத்தன;பின்னர் நான் ஆராய்ந்தபோது, அவர் பாகிஸ்தானிய வம்சாவளியினர் என்பதை புரிந்துகொண்டேன்… அவரின் நடத்தை மிகவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.”
மேலும், அந்த பதிவில் கூறப்பட்டதாவது, இந்தியாவுக்கு விசா பெற அவர் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், அதன் பின்னர் அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் மக்களை குறித்து “வலியூட்டும் கருத்துக்களை” பொதுக்கூட்டங்களிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும் தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரியாத அளவில் நுணுக்கமாக இருந்தாலும், தொடர்ச்சியான ஒரே மாதிரியான முன்னணி கருதுகோள்களை (stereotypes) வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அவை, இந்திய ஊழியர்கள் “திறமையற்றவர்கள்” அல்லது “விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்” என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த ரெடிட் பதிவாளர் மேலும் கூறியதாவது, மேலாளர் ஏற்கனவே பல குழு உறுப்பினர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதில் குறைந்தது ஒருவரை நீக்கியது, செயல்திறன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்காக அல்லாமல், தனது அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காக இருந்திருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த மேலாளர் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து நியமிக்கப்பட்ட புதிய ஊழியருடன் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவருடன் சேர்ந்து, இந்திய ஊழியர்களைப் பற்றிய பாகுபாடான கருத்துகளைப் பகிர்ந்து, அவற்றை மேலும் வலுப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், பெரும்பான்மையாக இந்தியர்கள் அடங்கிய குழுவிற்கு இன்னும் விரோதமான பணியிட சூழல் உருவாகி வருகிறது.
“அவரால் உண்மையான மதிப்பு எதுவும் வழங்கப்படவில்லை. எல்லாம் வெறும் ஆடம்பரமான சொற்கள், மேலோட்டமான பேச்சுகள் மட்டுமே. மார்க்கெட்டிங் அறிவில் உண்மையான உள்ளடக்கம் எதுவும் இல்லை,” என்று அந்த ஊழியர் தெரிவித்துள்ளார். “அவருக்கு அடிப்படை அறிவே இல்லாமல், உண்மையில் எந்த பங்களிப்பும் செய்யாமல் எங்களை இகழ்ந்தபடி நடப்பதைப் பார்ப்பது உண்மையிலேயே சோர்வடையச் செய்கிறது,” என அவர் தெரிவித்தார்.
“அமெரிக்காவில் பெரும்பாலான நிர்வாகத்தினர் இருப்பதால்,நான் இந்த பிரச்சினையை மேல்மட்டத்துக்கு எடுத்துச் சென்றாலும் அவர்கள் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்களா என எனக்கு சந்தேகம். மேலும், எடுத்துச் சென்றாலும், இந்த நபர் அமெரிக்க மேலாண்மையினரிடம் நெருக்கம் காட்டி, விஷயங்களைத் தன் வசமாக மாற்றிக் காட்டிவிடுவார்,” என்று அவர் தனது பதிவை முடித்துள்ளார்.
நெட்டிசன்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதில் ஒருவர், “முதலில் உங்கள் குழுவில் உள்ள பிற இந்தியர்களுடன் பேசிப் பாருங்கள். அவர்களில் 50% பேர் உங்களுடன் இணங்கினால், பிரச்சினையை மேல்மட்டத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்; இல்லையெனில் புதிய வேலைக்காக தேடத் தொடங்குங்கள்,” என்று குறிப்பிட்டார்.
மற்றொருவர், “அவரின் நடத்தையை பதிவு செய்து ஆதாரமாக வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் வேலைவிட்டு வெளியேறுவதற்கு முன், HR-க்கும், AVP-க்கும் அல்லது Head HR மற்றும் துறைத் தலைவருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்,” என்று பரிந்துரைத்தார்.
Readmore: கடைசி 4 மாதங்களில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!. பாபா வங்கா கணிப்பு!