’வாடிக்கையாளர்கள் இந்த தேதியில் வங்கிக்கு செல்ல வேண்டாம்’..!! ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

வங்கி ஊழியர்கள் வரும் 19ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்ட அறிக்கையில், ”வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன. இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. நிர்வாகம்-பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றன.

’வாடிக்கையாளர்கள் இந்த தேதியில் வங்கிக்கு செல்ல வேண்டாம்’..!!  ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சோனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கி ஊழியர்களிடையே பரவலாக கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வரும் 19ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

#Breaking..!! தொடர் கனமழை..!! மேலும் ஒரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Wed Nov 2 , 2022
தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் (வெள்ளிக்கிழமை) வரை மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என […]
rain school

You May Like