மோச்சா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பு வராது…! இந்திய வானிலை மையம் தகவல்…!

மோச்சா புயலால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் சூறாவளிக் காற்று மண்டலம், மே 9-ஆம் தேதிக்குள் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்எம்சி வெளியிட்ட அறிவிப்பின் படி, `மோச்சா’ என்று பெயரிடப்பட்ட புயல், வடக்கு திசையில் நகரும் என்பதால், தமிழகத்திற்கு தாக்கம் குறைவாக இருக்கும்.


இது மே 9 ஆம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டி வடக்கு நோக்கி நகரும் போது புயலாக வலுவடையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Vignesh

Next Post

அசத்தல்...! ராணுவத்தில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்...!

Mon May 8 , 2023
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ராணுவ விவகாரங்கள் துறை உள்நாட்டு ராணுவ படைப்பிரிவில் ஏற்கனவே உள்ள விதிகளில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் […]
images 2023 05 08T062846.795

You May Like