24 வயதுடைய வளர்ப்பு மகளை தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 24 வயது இளம்பெண்ணை அவரது வளர்ப்பு தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தொல்லை தாங்க முடியாததால், ஒருகட்டத்தில் தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு மகளை வன்கொடுமை செய்த நபரை அதிரடியாக கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் பல மாதங்களாகவே, தன்னுடைய வளர்ப்பு தந்தையால் உடல் மற்றும் மனரீதியாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். தன்னுடைய தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகவும் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், பயத்தில் இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய வளர்ப்பு தந்தையை தூக்கிலிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அந்த நபரை திருமணம் செய்து கொண்டார்.
அவரின் பெயர் புர்லால். தன்னுடைய 2-வது கணவர் மூலமாக அந்த பெண்ணுக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். முதல் கணவனின் மகளை மட்டும் புர்லால் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், குற்றவாளி புர்லாலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : “வீடியோ கால் மூலம் ஆபாச பேச்சு”..!! “காதல் வலையில் பலரை வீழ்த்தி சொகுசு வாழ்க்கை”..!! இளம்பெண் மரண வழக்கில் திடுக்கிட வைக்கும் உண்மை..!!