தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 100-ஐ கடந்தது..!! கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு..!!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக 100-ஐ கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 3,000 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவர் உட்பட மொத்தம் 105 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது, 79 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா தொற்று சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரித்துள்ள நிலையில், பெரம்பூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எஞ்சிய 35 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

CHELLA

Next Post

10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு..!! மார்ச் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு..!! முக்கிய அறிவிப்பு..!!

Wed Mar 29 , 2023
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. மொழிப்பாடத்துடன் துவங்கும் பொதுத்தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கம் 2023 ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல் மற்றும் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் 21ஆம் […]
542267

You May Like