தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக 100-ஐ கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 3,000 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவர் உட்பட மொத்தம் 105 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது, 79 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரித்துள்ள நிலையில், பெரம்பூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எஞ்சிய 35 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.