பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் ஆபத்துகள்..!! வாகன ஓட்டிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

பெட்ரோல் டேங்க்கில் அதிகபட்ச வரம்பிற்கு பெட்ரோல் நிரப்புவதால் ஏற்படும் ஆபத்துகளையும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.


அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை பலர் முறையாகப் பராமரிக்காமல் இருந்து வருவதால், அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. சாலைகளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி எரிவது போன்ற சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றதை செய்திகள் மூலம் அறிய முடிந்தது. இதற்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்கையும், பெட்ரோல் நிரப்பும் அளவையும் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சந்தேகம் அனைவரிடத்திலும் இருக்கும். வெயில் காலங்களில் அதிகமான வெப்பநிலை இருக்கக்கூடும் என்பதால், பெட்ரோல் டேங்கின் அதிகபட்ச வரம்பிற்குள் பெட்ரோலை நிரப்பக் கூடாது. அவ்வாறு நிரப்பினால், பெட்ரோல் டேங்கில் வெடிப்பை ஏற்படுத்தும்.

எனவே வாகனத்தில், பாதி எரிபொருளை நிரப்பி, காற்று வருவதற்கு இடமளிக்க வேண்டும். இந்த வாரத்தில் மட்டும், பெட்ரோலை அதிகமாக நிரப்பியதால், 5 வெடி விபத்துகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் ஒரு முறையாவது, பெட்ரோல் டேங்கை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியே வரவிட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால், பெட்ரோல் டேங்க்கால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும்.

CHELLA

Next Post

”சிக்கன் யாரும் சாப்பிடாதீங்க”..!! பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை..!! ஏன் தெரியுமா..?

Thu Feb 23 , 2023
ஜார்கண்ட் மாநிலத்தில் பரவும் கோழி காய்ச்சலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அங்குள்ள போகாரோ மாவட்டத்தின், லோஹஞ்சலில் அமைந்துள்ள அரசாங்க கோழி பண்ணையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. கோழிகளின் இறப்பு தொடர்பாக மாவட்ட கால்நடை வளர்ப்புத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கோழி இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அம்மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது இறந்த கோழிகளின் மாதிரிகளை எடுத்து கொல்கத்தா […]
WhatsApp Image 2022 12 25 at 4.52.18 PM

You May Like