நாட்டின் பல்வேறு பகுதிகளில் நுகர்வுப் பொருட்களின் விலை மாற்றங்களை மத்திய புள்ளியியல் துறை கணக்கிட்டு, ஒவ்வொரு மாதமும் விலைக் குறியீட்டு எண்களை வெளியிடுகிறது. அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. தற்போது அவர்கள் அடிப்படை சம்பளத்தில் 55% அகவிலைப்படி பெறுகின்றனர்.
தொழிலாளர் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் மாத நுகர்வோர் விலைக் குறியீடு 145 ஆக இருந்தது. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை 12 மாத சராசரி குறியீடு 143.6 ஆகும். கடந்த ஜனவரிக்குப் பிறகு புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுகளில் விலைக்குறியீடு தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது.
கடந்த ஜனவரிக்குப் பின் புள்ளியியல் துறை எடுத்த கணக்கீடுப்படி, விலைக்குறியீடானது ஜனவரியில் 56.3 என்று இருந்தது. பிப்ரவரியில் 56.6 என்றும், மார்ச்சில் 57.0 ஆகவும், ஏப்ரலில் 57.6 ஆகவும், மே மாதத்தில் 57.8 ஆகவும் உயர்ந்தது. ஜூனில் இது 58.17 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த உயர்வின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த உயர்வு, நிலுவைத் தொகையாக வழங்கப்படும். ஜூலை–டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி அறிவிப்பு தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி அதிகரிப்பதால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கம் ஏற்படும். இதன் காரணமாக பயணப்படி (TA), வீட்டு வாடகைப் படி (HRA) ஆகியவையும் அதிகரிக்கும். இந்த அறிவிப்புக்குப் பின், மாநில அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: ஜிஎஸ்டி குறைப்பு.. இந்த நேரத்தில் ஏன்? இதெல்லாம் தான் காரணமா? கேள்விகளை லிஸ்ட் போட்ட ப.சிதம்பரம்!