மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் எதிர்பார்த்திருந்த அகவிலைப்படி (DA) உயர்வு, ஜூலை மாதத்தில் 4% வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உள்ள 55% DA, இந்த உயர்வுடன் 59% ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில், ஊழியர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA/DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் முக்கியமாக பேசப்பட்டது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DA உயர்வு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? அகவிலைப்படி உயர்வு, பொதுவாக பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2025ல் பணவீக்கம் லேசாக குறைந்தாலும், ஊழியர் எதிர்ப்புகள் மற்றும் நிர்வாகம் மீதான அழுத்தம் காரணமாக, இந்த உயர்வு 2% ஐ விட அதிகமாக, 4% வரை இருக்கலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன.
DA நிலுவை தொகை எப்படி கணக்கிடுவது?
நிலுவைத் தொகை = (புதிய DA % – பழைய DA %) × அடிப்படை ஊதியம் × மாதங்கள்
உதாரணமாக:
அடிப்படை ஊதியம்: ரூ.35,400
DA உயர்வு: 4%
மாதங்கள்: 4 (ஜனவரி முதல் ஏப்ரல் வரை)
நிலுவைத் தொகை கணக்கீடு: 0.04 × ரூ.35,400 × 4 = ரூ.5,664
இந்த தொகை, மே மாத சம்பளத்துடன் சேர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நேரடியாக நன்மை பயக்கும். மேலும், 8.5 லட்சம் பேர், நிலுவை தொகையைப் பெறுவதற்காக கணக்கிடப்பட்டுள்ளனர்.
DA உயர்வும், நிலுவை தொகையும், ஊழியர்களின் வாங்கும் திறனை அதிகரித்து, குடும்பச் செலவுகளை சமாளிக்க உதவக்கூடியதாக இருக்கும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். ஜூலை மாத அறிவிப்பு இன்று அல்லது இந்த வாரத்துக்குள் வெளியாகலாம் என வட்டாரங்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளன.
Read more: சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை.. விசாரணை வளையத்திற்குள் வரும் நடிகர் ஸ்ரீகாந்த்..!!