தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் கும்பல் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மியான்மர் , தாய்லாந்து , கம்போடியா நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிலர் ஏமாற்றுவதாக ஆட்சியர் மதுசூதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை , சிலர் மியான்மர், தாய்லாந்து , கம்போடியா ஆகிய நாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதனால் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் , மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் , வேலைக்கான விசா , முறையான பணி ஒப்பந்தம் , என்னபணி ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இவை தெரியாவிட்டால் தமிழக அரசை சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரங்களை தொடர்பு கொண்டு பணியில் சேர உள்ள நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்திய தூதரக இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மது சூதன் ரெட்டி