ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த முதல் இந்திய நடிகையாக தீபிகா படுகோனே வரலாறு படைத்துள்ளார்..
2026 ஆம் ஆண்டில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் தீபிகா படுகோன் சேர்க்கப்பட்டார், இதன் மூலம் இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.. நேற்று, ஹாலிவுட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நேற்றிரவு இந்தப் பட்டியலை அறிவித்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நன்றி’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தீபிகா படுகோன் உடன், இந்த பட்டியலில் எமிலி பிளண்ட், கோட்டிலார்ட், ரேச்சல் மெக் ஆடம்ஸ், பிராங்கோ நீரோ, டிமோதி சலமெட், ராமி மாலெக், ஸ்டான்லி டூசி, டெமி மூர் மற்றும் கோர்டன் ராம்சே போன்ற நடிகர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்..
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் என்பது என்ன?
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் என்பது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் பவுல்வர்டில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம். இந்த நடைபாதையில் பொழுதுபோக்குத் துறையில் சிறந்து விளங்கியவர்களின் பெயர்கள் நட்சத்திர வடிவில் பதிக்கப்பட்டுள்ளன. இது பொழுதுபோக்குத் துறையில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. ஹாலிவுட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இதை நிர்வகிக்கிறது மற்றும் ஹாலிவுட் ஹிஸ்டாரிக் டிரஸ்ட் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 200 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் ஹாலிவுட் சேம்பர் ஆஃப் காமர்ஸுக்கு வருகின்றன. அதில் ஒரு குழுவினர் நட்சத்திரங்களைப் பெறுபவர்களைத் தேர்வு செய்கிறார்கள்.
தேர்வு செயல்முறை
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் தேர்வு செயல்முறை கடுமையானது, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை உள்ளடக்கியது. திரைப்படங்கள், தொலைக்காட்சி, நேரடி நாடகம்/நேரடி நிகழ்ச்சி, இசை பதிவு மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு ஆகிய ஐந்து பிரிவுகளில் அவர்களின் பங்களிப்புகள் மற்றும் செல்வாக்கின் அடிப்படையில் இறுதி பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தீபிகாவின் மற்ற சர்வதேச அங்கீகாரங்கள்
தீபிகா படுகோன் சர்வதேச அளவில் அங்கீகராம் பெறுவது இது முதன்முறையல்ல.. 2018 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலிலும் தீபிகா படுகோன் சேர்க்கப்பட்டார். அவர் TIME100 இம்பாக்ட் விருதையும் பெற்றவர். கத்தாரில் நடந்த இறுதிப் போட்டியில் FIFA உலகக் கோப்பை கோப்பையை வெளியிட்டதன் மூலம் அவர் மற்றொரு பெருமையை பெற்றார்..
மேலும் லூயிஸ் உய்ட்டன் மற்றும் கார்டியர் நிறுவனங்களுக்காக உலகளாவிய ஆடம்பர ஃபேஷன் நிறுவனங்களால் கையெழுத்திடப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் தீபிகா படுகோனே பெற்றார். கேன்ஸ் ஜூரி உறுப்பினராக இருப்பதும் அவரது சாதனைகளில் ஒன்றாகும்.
தீபிகா படுகோன் கடைசியாக நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 AD படட்தில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் AA22xA6 படத்தில் தீபிகா நடித்து வருகிறார்.. கல்கி 2898 AD இன் 2-ம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். தீபிகா படுகோன் சக நடிகரான ரன்வீர் சிங்கை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கானா அரசு நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்…!