பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியான படம் கல்கி 2898 AD.. நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.. வசூல் ரீதியிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.. மேலும் பலர் இந்த படத்தின் தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே கல்கி 2898 AD’ படத்தில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். கல்கி 2898 AD’, விஷ்ணுவின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரமான கல்கியை கருவில் சுமக்கும் பெண்ணாக தீபிகா நடித்திருந்தார்.. இருப்பினும், இப்போது படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ‘கல்கி 2898 AD’ படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் இந்த முடிவை தங்கள் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. “தீபிகா படுகோனே வரவிருக்கும் ‘கல்கி 2898 AD’ தொடரின் இரண்டாம் பாகத்தில் பங்கேற்க மாட்டார் என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். கவனமாக பரிசீலித்த பிறகு, நாங்கள் வேறு பாதையில் செல்ல முடிவு செய்துள்ளோம். முதல் படத்தின் நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் கூட்டணியைத் தொடர முடியவில்லை. ‘கல்கி 2898 AD’ போன்ற படத்திற்கு இன்னும் அதிக அர்ப்பணிப்பு தேவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நாங்கள் அவருக்கு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
அறிவிப்பு வெளியானவுடன், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தீபிகாவுக்கு பதில் கல்கி படத்தில் யார் என்று கேட்கத் தொடங்கினர். மேலும் பலர் புதிய நடிகைகளின் பெயர்களை பரிந்துரைக்கத் தொடங்கினர். சில பயனர்கள் கல்யாணி பிரிதர்ஷணியை பரிந்துரைத்துள்ளனர்.. சிலர் ஆலியா பட்டை பரிந்துரைத்து வருகின்றனர்..
அந்த வகையில் ஒரு பயனர், “தீபிகா படுகோனே தொடர்ச்சியில் இல்லாததால், ‘கல்கி 2898 AD’ தொடரின் இரண்டாம் பாகத்தில் பிரபாஸுக்கு சரியான தேர்வாக கல்யாணி பிரியதர்ஷன் இருப்பார். ‘லோகா’ புகழ் நடிகைக்கு அந்த கதாபாத்திரத்திற்குத் தேவையான வசீகரமும் எளிமையும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்…
பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோனே வெளியேறிய பிறகு இந்த செய்தி வந்துள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா வெளியேறுவதற்கு சில கோரிக்கைகள் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. தீபிகா கடந்த ஆண்டு தாயானார், அவரது மகள் துவா செப்டம்பரில் ஒரு வயதை எட்டினார். அதன் பின்னர், நடிகை மகப்பேறு விடுப்பில் இருந்து வருகிறார். தனது வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை பராமரிக்கவும், தனது மகளுடன் நேரத்தை செலவிடவும் தீபிகா ஒரு நாளைக்கு எட்டு மணி நேர ஷிப்டை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த எட்டு மணி நேர ஷிப்ட் இயக்குனருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தீபிகா படுகோனேவுக்கு பதில் யார்?
தீபிகா படுகோனேவின் இந்த முடிவுகள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றன. இருப்பினும், ‘கல்கி 2898 AD’ படத்தின் அடுத்த பாகத்தில் அவர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.. எனினும் தீபிகா படுகோனேவுக்கு பதில் எந்த நடிகை நடிக்கப் போகிறார்? அது படத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.