டிகிரி போதும்.. வருவாய் துறையில் டெபியூட்டி தாசில்தார் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..

job 2

புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள 30 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


டெபியூட்டி தாசில்தார் (Deputy Tahsildar) – 30

இதில் பொதுப் பிரிவில் – 12, பொருளாதாரத்தில் பிரிவினர் – 3, எம்பிசி – 5, எஸ்சி – 5, ஒபிசி – 3, பிசிஎம் – 1, இபிசி – 1 மற்றும் மாற்றுத்திறனாளிகள் – 1 என நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: புதுச்சேரி அரசில் உள்ள டெபியூட்டி தாசில்தார் பதவிக்கு 27.06.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 32 வயதைக் கடந்திருக்கக்கூடாது. இதில் எம்பிசி, ஒபிசி, இபிசி, பிசிஎம் பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி பிரிவினருக்கு 5 வருடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கூடுதலாக 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வி தகுதி: டெபியூட்டி தாசில்தார் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு புதுச்சேரியில் வழங்கப்படும் ஊதியத்தின் நிலை 6 (Pay Matrix in &th CPC) வழங்கப்படும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமாக இரண்டு தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படும். முதல் தாள் பொது அறிவு, நடப்பு நிகழ்வு, ஆங்கில மொழி, இலக்கியம், இலக்கணம், கணினி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் 100 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இத்தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: புதுச்சேரி அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://recruitment.py.gov.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.06.2025

Read more: முத்த மழை பாடலுக்கு கோரஸ் பாடிய இந்த பொண்ண கவனிச்சீங்களா..?


Next Post

“அப்பா என்னை விட்ருங்க”..!! 24 வயது மகளை பல மாதங்களாக மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர தந்தை..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

Sat Jun 7 , 2025
24 வயதுடைய வளர்ப்பு மகளை தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 24 வயது இளம்பெண்ணை அவரது வளர்ப்பு தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தொல்லை தாங்க முடியாததால், ஒருகட்டத்தில் தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு […]
Rape 2025 4

You May Like