புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள 30 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெபியூட்டி தாசில்தார் (Deputy Tahsildar) – 30
இதில் பொதுப் பிரிவில் – 12, பொருளாதாரத்தில் பிரிவினர் – 3, எம்பிசி – 5, எஸ்சி – 5, ஒபிசி – 3, பிசிஎம் – 1, இபிசி – 1 மற்றும் மாற்றுத்திறனாளிகள் – 1 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: புதுச்சேரி அரசில் உள்ள டெபியூட்டி தாசில்தார் பதவிக்கு 27.06.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 32 வயதைக் கடந்திருக்கக்கூடாது. இதில் எம்பிசி, ஒபிசி, இபிசி, பிசிஎம் பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி பிரிவினருக்கு 5 வருடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கூடுதலாக 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வி தகுதி: டெபியூட்டி தாசில்தார் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு புதுச்சேரியில் வழங்கப்படும் ஊதியத்தின் நிலை 6 (Pay Matrix in &th CPC) வழங்கப்படும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமாக இரண்டு தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படும். முதல் தாள் பொது அறிவு, நடப்பு நிகழ்வு, ஆங்கில மொழி, இலக்கியம், இலக்கணம், கணினி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் 100 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இத்தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: புதுச்சேரி அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://recruitment.py.gov.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.06.2025
Read more: முத்த மழை பாடலுக்கு கோரஸ் பாடிய இந்த பொண்ண கவனிச்சீங்களா..?