தனியார் பள்ளிகள் இந்த விதிகளை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம்.. ஆப்பு வைத்த மாநில அரசு..

Delhi s schools reopened on Monday after the state 1700676704421 1711689811458 1

கல்விக் கட்டண விதிமுறைகளுக்கு இணங்காத தனியார் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி என்பது வியாபாரமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்தில் நாட்டில் உள்ள பல தனியார்கள் லட்சக்கணக்கில் கல்விக்கட்டணம் வசூலித்து வருகின்றன. எல்.கே.ஜி, யு.கே.ஜிக்கே லட்சங்களில் பள்ளிக்கட்டணம் இருக்கும் பல பள்ளிகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளிக்கட்டணம் செலுத்தவே தனியாக சம்பாதிக்க வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது.


இந்த சூழலில் நியாயமற்ற பள்ளிக் கட்டண உயர்விலிருந்து பெற்றோரைப் பாதுகாக்கும் வகையில் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தனியார் பள்ளிக் கட்டணங்கள் மீதான விதிமுறைகளை கடுமையாக்கவும், மீறல்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் ஒரு அவசரச் சட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி பள்ளிக் கல்வி (கட்டணங்களை நிர்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை) மசோதா, 2025 வரைவை அடிப்படையாகக் கொண்ட இந்த அவசரச் சட்டம், விரைவில் துணை நிலை ஆளுநர் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இந்த முடிவை அறிவித்த டெல்லியின் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், இந்த நடவடிக்கை பெற்றோருக்கு, குறிப்பாக தனியார் உதவி பெறாத பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறினார். மேலும் “ இது ஒரு மைல்கல். சட்டம் இயற்றப்பட்டவுடன், பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்துவது தடுக்கப்படும்.. ”என்று அவர் கூறினார்.

விதிகளை மீறினால் கடும் அபராதம்

கல்விக் கட்டண விதிமுறைகளுக்கு இணங்காத தனியார் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க, இந்த அவசரச் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. முதல் முறையாக மீறினால், ரூ.1 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.. மீண்டும் மீண்டும் தவறு செய்யும் தனியார் பள்ளிகளுக்கு ரூ.2 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், ஒரு பள்ளி விதிமுறைகளை மீறி வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணத்தை 20 வேலை நாட்களுக்குள் திருப்பித் தரத் தவறினால், அபராதத் தொகை ஒவ்வொரு 20 நாட்களுக்கும் இரட்டிப்பாகும்.

இந்த புதிய விதிகளை மீண்டும் மீண்டும் மீறும் பள்ளிகள் எதிர்கால கட்டண உயர்வுகளை முன்மொழியும் உரிமையை இழக்க நேரிடும்.. மேலும் அவற்றின் நிர்வாக உறுப்பினர்கள் முக்கிய பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

கண்காணிப்புக்கான 3 அடுக்கு குழுக்கள்

சரியான மேற்பார்வையை உறுதி செய்வதற்காக, பள்ளி, மாவட்டம் மற்றும் மண்டல அளவில் 3 அடுக்கு குழுக்களை உருவாக்குவதற்கு இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. கல்வி இயக்குநர் தலைமையிலான உயர்மட்ட திருத்தக் குழுவில் அரசு அதிகாரிகள், நிதி நிபுணர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகள் இருப்பார்கள்.

கட்டாய பள்ளி-நிலை கட்டணக் குழுக்கள்

சர்வதேச பாடத்திட்டங்களை வழங்கும் பள்ளிகள் உட்பட அனைத்து தனியார் பள்ளிகளும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் ஆண்டுதோறும் பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழுவை நிறுவ வேண்டும். இந்தக் குழுவில் ஊழியர்கள் மற்றும் பெற்றோர் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் ஆணைகள் இருக்க வேண்டும்.

கட்டண முன்மொழிவுகளுக்கான கட்டமைப்பு

கல்வி கட்டணங்களை முன்மொழியும் உரிமையை பள்ளிகள் தக்க வைத்துக் கொண்டாலும், அவை வரையறுக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் அதனை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் தெளிவுப்படுத்தி உள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது அடிக்கடி அபராதம் விதிக்கப்பட்ட பள்ளிகள் கல்வியாண்டிற்கான எந்த திருத்தங்களையும் பரிந்துரைக்க தடை விதிக்கப்படும்.

Read More : இதை செய்யவில்லை எனில் அங்கீகாரம் ரத்து.. 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய UGC..

English Summary

The Delhi government has decided to impose a fine of up to Rs 10 lakh on private schools that do not comply with tuition fee regulations.

RUPA

Next Post

ஐ.சி.சி. 'டி-20' தரவரிசை!. திலக் வர்மா அசத்தல் முன்னேற்றம்!. சூர்யகுமார் யாதவ் பின்னடைவு!

Thu Jun 12 , 2025
ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா ‘நம்பர்-3’ இடத்துக்கு முன்னேறினார். சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 804 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சர்மா […]
ICC T 20 rankings 11zon

You May Like