“ சர்வாதிகாரி ஆர்.என்.ரவி..” ஆளுநருக்கு எதிராக சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..

கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. குறிப்பாக தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்ககூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆளுநருக்கு எதிரான ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகியது.. மேலும் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. தனது உரையில் திராவிட மாடல், சமூக நீதி உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தது, உடனடியாக ஆளுநர் உரைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது என பல சம்பவங்கள் அரங்கேறின..

டெல்லி விரைகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு..!!

அந்த வகையில் தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி., மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப் பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்..

வெளிநாடுகளில் இருந்துவரும் நிதிகள் பலவும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன.. குறிப்பாக கூடங்குளம் அணு உலை, விளிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்ட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது..

குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டம் தூண்டப்பட்ட போராட்டம்.. ஸ்டெர்லைட் போராட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வந்துள்ளது.. நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்..” என்று தெரிவித்தார்..

ஆளுநரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வரும் 12-ம் தேதி, ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்..

இந்நிலையில் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. அதில் “ ஆட்டுக்கு தாடியும், தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவியும் எதற்கு..? சர்வாதிகாரி ஆர்.என். ரவி, வெளியேறுங்கள் ஆர்.என்.ரவி..” என்று பதிவிட்டுள்ளனர்.. மேலும் ட்விட்டரிலும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிரான மீம்ஸ் மற்றும் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது..

0d7766d8edf52bd3a28eb138aa5972c87ff29b27ae386b3c6a562173f74964b4

RUPA

Next Post

இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Sat Apr 8 , 2023
தமிழகத்தில் இன்றும் நாளையும், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட […]
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

You May Like