பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா அல்லது கிரிக்கெட் வாரியமா? என கேள்வி எழுப்பிய கர்நாடகா உயர் நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஐபிஎல், பிசிசிஐ, பெங்களூர் ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டு 18வது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆர்சிபி வெற்றி விழா பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா நடத்த ஏற்பாடுகல் செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றி விழாவை கொண்டாட ஆர்சிபி ரசிகர்கள் கூடினர்.
இதனால் வெறும் 35 ஆயிரம் பேர் கூடும் இடத்திற்கு லட்சக்கணக்கானோர் குவிந்தனர். மைதானம் மற்றும் மைதானத்துக்கு வெளியே என மொத்தம் 3 லட்சம் பேர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உள்ளூர் நபர்களை தவிர்த்து, வெளியூரில் இருந்து 2.50 லட்சம் பேர் கூடினர். இதனால் தான் நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்தார். மைதானத்தில் உள்ள 21 நுழைவு வாயில்கள் திறந்து இருந்தது. கேட் எண் 6, 7, 8 ஆகிய பகுதிகளில் தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.
அப்போது, கர்நாடக நீதிமன்ற நீதிபதி சார்பில், ”இவ்வளவு கூட்டம் வரும் போது முறையான நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் அல்லவா?காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? என கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பட்டது.
தொடர்ந்து, ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா அல்லது கர்நாடக கிரிக்கெட் வாரியமா எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது தொடர்பாக பெங்களூர் ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ நிர்வாகங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 10 அம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Read more: “ஓஹோ.. கல்யாணமே பண்ணிட்டாங்களா”..? வைரலாகும் ரவி மோகன் – கெனிஷாவின் திருமண புகைப்படம்..?