அதிகநேரம் போன் பார்த்துக்கொண்டிருந்ததால் டிஜிட்டல் வெர்டிகோ என்ற நோய் பாதித்து நிற்கமுடியாமல் படுத்தப்படுக்கையாக இளம்பெண் ஒருவர் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெர்டிகோ என்பது காரணமே இல்லாமல் வரும் தலைசுற்றல் அல்லது மயக்கத்தை குறிப்பதாகும். இது இருந்தால் கண்கள் மங்கி தலை கிறு கிறுப்பது போன்ற தோற்றம் ஏற்படும். இந்த வெர்டிகோ நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அதிக வியர்வை சுரப்பது, குமட்டல், வாந்தி மற்றும் உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றுகிறது. ஒரு நபரின் காது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் எதாவது அடைப்பு ஏற்படும் போது வெர்டிகோ பிரச்சினை ஏற்படுகிறது.
இந்தநிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஃபெனெல்லா (29). இவர் செல்போனில் ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘வெர்டிகோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபெனெல்லா, தற்போது நிற்க முடியாமல் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘ஃபெனெல்லாவின் தந்தை ஒருநாள் தனது மகளை மருத்துவனைக்கு அழைத்து வந்தார். அவரை பரிசோதித்து பார்த்ததில், அவருக்கு சைபர்மோவ் அல்லது டிஜிட்டல் வெர்டிகோ நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதிக நேரம் செல்போனை பயன்படுத்தியதால், அவரது நரம்புகள் பாதிக்கப்பட்டு ரத்தம் மற்றும் ஆக்சிஜனின் ஓட்டத்தை குறைத்து இந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.