வரும் 25ம் தேதி புயல் உருவாகும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
1
அந்தமான நிக்கோபார் தீவின் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக அப்போது கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. காற்றழுத்ததாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..
மேலும் , வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பின்னர் மேலும் வலுவடைந்து , புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு புயலாக மாறும் பட்சத்தில் சித்ரங்கு என்ற பெயரிட்டு அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்னர் பரவலான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து , கடலூர் துறைமுகத்தில் 1ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை இது குறிக்கின்றது.