திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (18). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரிடம் நட்பாக பழகியுள்ளார். பின் நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், வாலிபர் செல்வம் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உடலுறவு வைத்துள்ளார்.
பின் வீட்டில் இருந்த சிறுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து விசாரிக்கையில், வாலிபர் செல்வம் தன்னிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனை சென்று பரிசோதிக்கையில் சிறுமி, 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், காங்கேயம் அணைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய வாலிபர் செல்வத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.