fbpx

கணவனை அறிவாள்மனையால் வெட்டி கொன்ற மனைவி… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை அறிவாள்மனையால் மனைவி வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஏழுமலை. இவரது மனைவி கலைச்செல்வி. கட்டிட தொழிலாளியான ஏழுமலை, நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கலைச்செல்வி மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு கலைச்செல்வியிடம் தினந்தோறும் கணவர் பிரச்சனை செய்துவந்துள்ளார். வழக்கபோல், மதுபோதையில் இருந்த ஏழுமலை கலைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, அறிவாள்மனையால் ஏழுமலையை வெட்டியதாகவும், இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாகவும் தெரிகிறது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து மனைவியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Kokila

Next Post

ரெடியா இருங்க...! ஆன்லைன் மூலம் 4 கட்டங்களாக தேர்வு...! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு...!

Sat Feb 4 , 2023
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நமர்களுக்கு இன்று கம்பியூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகங்கள் மற்றும் மண்டல வளாகங்களுக்கான தற்காலிக தமிழ் ஆசிரியர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட உங்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக, தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேர்வு இன்று விவேகானந்தா அரங்கம், அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பிரிவுகளாக நடத்தப்படும். தேர்வு வினாத்தாள் விடையை தேர்ந்தெடுக்கும் வகையிலான மற்றும் […]

You May Like