வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார், அங்கிருந்த ஒரு வாலிபரையும், இரண்டு பெண்களையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், பிடிப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவருடன் இருந்தது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண் என்பதும், மற்றொருவர் விருதுநகரை சேர்ந்த 43 வயது பெண் என்பதும் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆண்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, அந்த வீட்டிற்கு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.
இதையும் படிக்க… நெரிசலில் சிக்கிய பேருந்து..!! நசுக்கி எடுத்த காதலன்..!! ஸ்லீப்பர் கோச்சில் சிறுமியுடன் உல்லாசம்..!!