fbpx

’இளைஞர்களே தயாரா இருங்க’..!! தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! எப்போது தெரியுமா?

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 9ஆம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

’இளைஞர்களே தயாரா இருங்க’..!! தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! எப்போது தெரியுமா?

இந்த முகாமில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளங்கலை பட்டம் முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம். இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தங்களின் சுயவிவரக் குறிப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும் மாணவர்கள் தங்களின் சுயவிவர குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெண்ணின் கை, மார்பகங்களை தனியாக வெட்டி எடுத்த கொடூரம்..!! பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்..!!

Mon Dec 5 , 2022
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண் தனது காதலனால் துண்டு துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதேபோன்று மற்றொரு சம்பவம் பீகாரில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் யாதவ். அவரது மனைவி நீலம்தேவி (40). இவர்கள் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஷகில் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு […]

You May Like