fbpx

செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி…!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலையின் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.

இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தனியறை பாட்டாசு ஆளை வெடி விபத்தில் இதுவரை 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி ஆகியுள்ளனர். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த ஆலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Kathir

Next Post

'Circle to search'அம்சத்தை அறிமுகம் செய்யும் குரோம்..!! இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Thu May 9 , 2024
கூகுள் குரோம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு ‘சர்க்கிள் டு சர்ச்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் தனது புதுமையான “சர்க்கிள் டு சர்ச்” அம்சத்தை குரோம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு வழங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஒரு பொருளின் விவரம், அல்லது படத்தின் பொருள்  பற்றிய விவரம் தெரியவில்லை என்றால் அதை வட்டமிட்டு தேடுவது தான் இந்த அம்சத்தின் சிறப்பாகும்.  இந்த அம்சம் சமீபத்திய சாம்சங் S24 சீரிஸின் மூலம் பிரபலமானது.  […]

You May Like