தமிழக கோவில்களின் போலியான பெயர் மூலம் வசூல் வேட்டைநடத்தி வரும் கும்பலுக்கு வேட்டுவைக்கும் வகையில் உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவில் இனி போலி இணையதளங்கள் செயல்படாதவாறு முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தமிழகங்களில் ஏராளமான பிரபலமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் , 60ம் கல்யாணம் போன்றவை நடத்தப்படுகின்றன. இவற்றில் இணையதளம் மூலம் வசூல்செய்யும் முறையும் உள்ளது. கட்டணத்தை இணையதளத்தில் செலுத்திவிட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளாலாம். இந்நிலையில் கோவில்களின் பெயர்களில் ஏராளமான தளங்கள் உருவாகத் தொடங்கின. பார்ப்பதற்கு உண்மையான வலைத்தலம் மாதிரி இருக்கும் போலி இணைதளம் லட்சக்கணக்கில் வசூலித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. குறிப்பாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இது போன்ற முறைகேடு நடப்பதாக ராமநாதபுரத்தை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரபல கோவில்களில் ஒன்றான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரூ.2000 மட்டும் வாங்கி வருகின்றனர். ஆனால் , இந்த போலி இணையதளததில் 4 லட்சம் வரை வசூலிக்கப்படுகின்றது. இவ்வாறு கோவில் பெயரில் மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதே போல கோவில்களின் பெயரில் தனியாக இணையதளம் செயல்படுவதை ஒரு போது ஒத்துக் கொள் ளமுடயாது என கூறிய நீதிமன்றம் போலி இணையதள உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் மத உணர்வுகளை வியாபாரம் ஆக்க வேண்டாம் என தெரிவித்த நீதிபதி கோயிலின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இது மட்டுமின்றி திருப்பதி போன்ற பிரபல கோயில்களின் பெயர்களின் போலி இணையதளம் செயல்பட்டு வருகின்றது. இதில் தரிசன டிக்கெட்டுக்களை விற்று கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.