fbpx

13-வது மாடியிலிருந்து கீழே விழுந்த கல்லூரி பேராசிரியை..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

தனியார் கல்லூரி பேராசிரியை, 13-வது மாடியில் இருந்து கீழே விழுந்து, இறந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சௌமியா (32). இவர், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரியா (11), சிவியா (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். பிரேம்குமார் பல்வேறு வியாபாரங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர்களுடன் சௌமியா அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் பி.பிளாக்கில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சௌமியா, மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், சௌமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

13-வது மாடியிலிருந்து கீழே விழுந்த கல்லூரி பேராசிரியை..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சௌமியா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் இருந்து துணி காய போடுவதற்காக வெளியே வந்துள்ளார். அதன்பிறகே அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் துணிகளை காய வைத்தபோது நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கீழே தள்ளி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chella

Next Post

’’மகளை பத்திரமாக கவனித்துக்கொள்’’ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பைலட்டின் உருக்கமான இறுதி வார்த்தைகள் !!!

Wed Oct 19 , 2022
கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பைலட் கடைசியாக பேசிய உருக்கமான தகவல்கள் பற்றிஅவரது மனைவி பகிர்ந்து கொண்டுள்ளார்.. நேற்று 6 பேருடன் உத்தராகண்ட் மலைப்பகுதியில் வழிபாடு நடத்திவிட்டு தனியார் ஹெலிகாப்டரில் 6 பக்தர்களுடன் புறப்பட்டது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அனில் சிங் என்பவர் ஹெலிகாப்டரை ஓட்டினார். மலைப்பகுதியில் உயர சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென மலையில் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துஏற்பட்டது. இந்த விபத்தில் அனில் சிங் […]

You May Like