fbpx

’கிரிக்கெட் போட்டியால் இப்படி ஒரு பிரச்சனை வரும்னு தெரியாது’..!! குடிபோதையில் இளைஞர்கள் செய்த காரியம்..!!

கும்மிடிப்பூண்டி அருகே கிரிக்கெட் போட்டியால் 2 கிராமங்கள் இடையே மோதல் வெடித்த நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பக்கத்து கிராமமான சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த விவகாரம் பெரிதானதால், இரவில் இருதரப்பும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமானது.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்தாமல் உள்ளதாக இரு தரப்பு மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் வரப்பெற்றும் நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பையும் அழைத்து சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

Chella

Next Post

முடங்கிப்போன தொழில்..!! வீடு முழுவதும் ரத்தம்..!! துடிதுடித்த உயிர்..!! 3 பேர் குத்திக்கொலை..!!

Mon Feb 27 , 2023
டெல்லி மாநிலம் மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவருக்கு சுனிதா என்ற மனைவியும் இரு குழந்தையும் இருந்தனர். ராஜேஷ் ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிறுவனம் கொரோனா காலத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்ததால், தொழில் மோசமடைந்து கடன் நெருக்கடிக்கு ஆளான ராஜேஷ், தொழிலை நிறுத்திவிட்டு கடை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் தனது மனைவி சுனிதா, 5 […]
முடங்கிப்போன தொழில்..!! வீடு முழுவதும் ரத்தம்..!! துடிதுடித்த உயிர்..!! 3 பேர் குத்திக்கொலை..!!

You May Like