fbpx

சாலை ஓர கடைகளில் காய்கறி வாங்கிய நிதியமைச்சர்….

சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாலையோரக் கடைகளில் காய்கறிகள் வாங்கினார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மயிலாபூர் வழியாக விமான நிலையம் சென்றார். அங்குள்ள சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி அங்காடிகளில்அவர் தனது வாகனத்தை நிறுத்தி காய்கறி வாங்கினார்.

பின்னர் பெண் வியாபாரி ஒருவரிடம் பேசினார். அங்கு நின்று கொண்டிருந்த மக்களிடமும் அவர் உரையாடல் நடத்தினார். இது டுவிட்டரில் வெளியாகி உள்ளது.

Next Post

கஷ்டப்படாம உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்க உடல் எடையை டக்குனு குறைக்கலாம்... எப்படி தெரியுமா?

Sun Oct 9 , 2022
நவீன வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பிஸியான வாழ்க்கை ஆகியவை மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரிசெய்ய நீங்கள் தனித்தனியாக மெனக்கெட தேவையில்லை. இதற்கு யோகா சுவாசப்பயிற்சியே போதுமனதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். ஆழ்ந்த மூச்சு மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்வது உங்கள் மனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தருவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் பெருமளவில் மேம்படுத்தும். மைண்ட்ஃபுல்னஸ் என்றும் […]

You May Like